Pages

Wednesday 11 July 2012

காதல் மறந்தனையோ?

              (தலைவன் ஏக்கம்)

தாவொன்று தீயென்று கேட்டது யார் - வானத்
தண்ணிலவுப் பெண்ணே தீய்ப்பதென்ன
பாவைநீ போவென்றும் கூறலென்ன - வண்ணப்
பால்வெண்ம திநீயும் போவதெங்கே
நாவெழும் சொல்கொண்ட மாற்றமென்ன - பின்பு
நான் கொண்ட காதலுக் கானதென்ன
தேவையும் போனதும்தென்றலென - ஓடித்
தேகம் தழுவமறுத்த தென்ன

சோவென்று பால்பொழி வெண்ணிலவில் - அவள்
சாயென்று என்னை மடியிருத்தி
சாவென்றே ஒன்று வரும் வரையும் -  உன்னைச்
சார்ந்து கிடப்பேனென் றன்றுரைத்தாள்
பூவென்ற உள்ளம் பொழுதிருளப் -  பல
பொய்யென்ற வண்ணம் எடுப்பதுண்டோ
நாவென்ற பக்கம் மெல்லா உருளும் - ஆயின்
நாமென்ற அன்பு புரள்வதென்ன

காவொன்றில் கோநடை கொள்ளவந்தால் - உடன்
வா என்ன போரென்று வாள்கொண்டதென்?
பூவென்றும் தேனென்றும் காணவந்தேன் - மனம்
பொல்லாவிழி கொண்டு என்னை வென்றாய்
நீவென்ற தாயின்று யார் சொன்னதோ - என்றன்
நெஞ்சில் சிறைகொண்டேன் உன்னை இங்கே
தூவென்றென் னைவிட்டுத் தூரம்செல்ல -அந்த
தெய்வம் விட்டவழி தீர்வு என்ன?

ஓவென்று உள்ளமுனை நினைத்து - மனம்
ஓடென்று உன்னெழில் பின்னலைந்து
நாடென்று நாடிப் பறித்தெடுத்து  - உன்னில்
நானென்று ஆகுமிவ் வேளைதனில்
தாயென்று உன்னன்பு காத்துநிற்க - நீயோ
தாமென்றும் தீம்மென்று துள்ளிவிட்டு
தேயென்று திங்களின் தேய்வளித்தால் -அந்த
தெய்வத்தின் நெஞ்சும் பொறுத்திடுமோ

ஆவென்று போற்றுமுன் அன்பு தனும் - சதி
யாரென்ன செய்யினும் அற்றிடுமோ
ஆவென்றேன் என்றிடும் பொய்மொழியைச் - சொல்லி
ஆகஎன் உள்ளத்தை ஏய்த்தனையோ
வாவென்று கோவுறை ஆலயத்தில் - அன்று
வந்து நின்றே மாலைகொண்டதென்ன
ஆவது தெய்வம் நினப்பதொன்றே - நீயும்
ஆயிரம் கொண்டென்ன மாறிவிடும்

Saturday 7 July 2012

அலரும் மலரும் அவளும்

            

(அவன் ஆற்றாமை)
ஒயிலன்ன நடை கடலின் அலைபுரைய நெளிகுழலும்
கையிலென்ன மலர் காந்தாள் காணுமெழில் மதியுறல
வெயிலென்ன விழிகூர்மை தருமான தகிப்பெழவும்,
துயிலென்ன விடுஎன்று துயர் செய்வள் நிகர்வாளின்

கொடும்வீச்சின் செயலொப்ப குளிர்காற்றின் கூர்மையது
விடும்வேலின் தகையன்ன விடலைஉடல் புயல்கடுப்ப
தொடுமலரின் கணைவீச்சில் துயரேய்ப்ப தருமிவளை
படும் கதிரின் ஒளிபுல்லின் பனியியைய உருகினவன்

(மலரின் ஆற்றாமை:)
வளையலொலி பெருகமலர் வடிவிற் றனை வென்றவளும்
அளைமேகக் கூந்தல் தனையடைய அதன்நறுமணமும்
விளையின்பம் தருநாற்றம் வியந்து மனம்சிறுமை கொள
களைபோமென் றெண்ணியுடன் கருகுவது போற்குவியும்

துளை மூங்கில் ஊதுமது தேடும்கரு வண்டிதழின்
மழைஈரம் மெழுகுஎழில் மலரிதழில் இல்லையென
இழையொத்த இடைகொடியின் இசைநளினஎழில் போதை
விளை வகையும் கண்டு தனை விடுமென்று மீளலரும்

(அவளோ)
வளைகொடியின் மலரும் கணம் மலருவதும் ஒடிவதுவும்
முளைபயிரின் பசும்தனை முகமதிடை புனையிவளும்
சுளை தேனில் ஊறும்இனி சொல்மீட்டும் கருவிமலர்
களைகொண்டு விரியும்கணம் கருவண்டில் அஞ்சிவிடும்