ஆனா ழானா கூனா டானா இன்னன்னா
அலரும் பூவில் இதழைக் கண்டேன் அதிலென்ன
ஆனா வானா ளீனா லூனா இம்மான்னா
அதனைக் கண்டேன் அருகில் நின்றேன் அழகென்ன!
மானா தேனா மகிழம் பூவோ என்னென்ன
மனதில் தோன்றும் உணர்வை நானும் என்சொல்ல
பேனாக் கொண்டு எழுதப் போதாப் பொழுதென்ன
பிறந்தே ஒருநாள் போகும் அளவோ முழுதென்ன
கானா நெடிலும் பக்கம் தானா இல்லன்னா
கொண்டே உள்ளம் கனியத் தமிழாம் அதுவென்ன
தீனா ரூனா மானா கானா இள்ளன்னா
திகழும் அழகில் தெருவில் வந்தால் ஊரென்ன
தானாச் சுற்றும் உலகம் கூடப் பின்செல்ல
தனியே நானும் நிற்பே னோஎன் தலைபின்ன
பூநா டும்புள் ளினமே போலும் செல்லென்ன
பொழுதும் வாடும் எண்ணம் என்னை முன்தள்ள
ஏனோ உள்ளம் தேனாய் தித்திக் கும்மின்ன
திங்கள் செல்லும் திசையில் செல்லும் முகிலென்ன
நானா எந்தன் உள்ளம் ஆடும் பொன்வண்ண
நதியாய் ஓடித் தேடும் இன்னல் போய்முன்னை
வானாய் வானில் ஓடும் மேகப் பஞ்சன்ன
வடிவைக் கொண்டே வாழ்வில் இன்பம் கொள்ளென்ன
ஆநான் இன்றே பொறுமை விட்டேன் நடையன்ன
நளினச் சிலையின் மனதில் எதுதான் உளதென்ன
போனா என்சொல் வாளோ சொல்லும் பதிலென்ன
புதிராய் கண்டும் போனே னெந்தன் கால்பின்ன
காணா வகையில் நின்றாள் கையில் கடிதென்ன
காலின் அடியில் தேயும் அதனைக் கைகொள்ளத்
தானாப் பொழியும் மழையும் இடியும் மின்மின்ன
தருமே திகிலும் அதுபோல் கண்டேன் இதுவென்ன
மீனாம் கண்கள் எரியும் மலைவாய்த் தீயென்ன
மிஞ்சக் கண்டே ஆனேன் தீமுன் பனியென்ன
அலரும் பூவில் இதழைக் கண்டேன் அதிலென்ன
ஆனா வானா ளீனா லூனா இம்மான்னா
அதனைக் கண்டேன் அருகில் நின்றேன் அழகென்ன!
மானா தேனா மகிழம் பூவோ என்னென்ன
மனதில் தோன்றும் உணர்வை நானும் என்சொல்ல
பேனாக் கொண்டு எழுதப் போதாப் பொழுதென்ன
பிறந்தே ஒருநாள் போகும் அளவோ முழுதென்ன
கானா நெடிலும் பக்கம் தானா இல்லன்னா
கொண்டே உள்ளம் கனியத் தமிழாம் அதுவென்ன
தீனா ரூனா மானா கானா இள்ளன்னா
திகழும் அழகில் தெருவில் வந்தால் ஊரென்ன
தானாச் சுற்றும் உலகம் கூடப் பின்செல்ல
தனியே நானும் நிற்பே னோஎன் தலைபின்ன
பூநா டும்புள் ளினமே போலும் செல்லென்ன
பொழுதும் வாடும் எண்ணம் என்னை முன்தள்ள
ஏனோ உள்ளம் தேனாய் தித்திக் கும்மின்ன
திங்கள் செல்லும் திசையில் செல்லும் முகிலென்ன
நானா எந்தன் உள்ளம் ஆடும் பொன்வண்ண
நதியாய் ஓடித் தேடும் இன்னல் போய்முன்னை
வானாய் வானில் ஓடும் மேகப் பஞ்சன்ன
வடிவைக் கொண்டே வாழ்வில் இன்பம் கொள்ளென்ன
ஆநான் இன்றே பொறுமை விட்டேன் நடையன்ன
நளினச் சிலையின் மனதில் எதுதான் உளதென்ன
போனா என்சொல் வாளோ சொல்லும் பதிலென்ன
புதிராய் கண்டும் போனே னெந்தன் கால்பின்ன
காணா வகையில் நின்றாள் கையில் கடிதென்ன
காலின் அடியில் தேயும் அதனைக் கைகொள்ளத்
தானாப் பொழியும் மழையும் இடியும் மின்மின்ன
தருமே திகிலும் அதுபோல் கண்டேன் இதுவென்ன
மீனாம் கண்கள் எரியும் மலைவாய்த் தீயென்ன
மிஞ்சக் கண்டே ஆனேன் தீமுன் பனியென்ன