கண்ணெதிரில் குதித்தோடும் நதியெனக்
காணும் மகிழ்வு கொண்டாள் - உயர்
வெண்முகிலும் கொண்ட வானநிலவென
வண்ணம் மறைந்து கொண்டாள்
திண்ணமிதே அந்த தென்றலென விழி
தன்னில் குளுமை கொண்டாள் - ஏதும்
பண்ணாமலே உயிர் வேதனை ஆக்கிப்பின்
பாதியென் றாகிவிட்டாள்
கண்களினைக் கயலென்று சொன்னார் அவை
காணுமோ என்றிகழ்ந்தேன் - இது
பெண்மயிலோ எனப் பேச்சுரைத்தார் இவள்
பேதமை யில் நகைத்தேன்
எண்ணமின்றி அயல் சென்றவனை அட
எப்படி மாற்றினளோ - இரு
கண்ணசைவில் என்னை கொள்ளையிடும் வகை
கண்டு திகைத்துநின்றேன்
பொன்னெனு மோரெழில் மாலை கண்டேன் சுடர்
போகமயங்கி நின்றேன் - பசுந்
தென்னோலையில் நடஞ்செய்யுந் தென்றல்தொட
தேகம்சிலிர்க்க நின்றேன்
என்னானதோ இவள் பார்வைபட இவை
அத்தனையும் மறந்தேன் - என்ன
சொன்னால் நடந்திடும் மாயமென அவள்
சுட்டும் வழிநடந்தேன்
தண்டாடும் பொய்கையின் தாமரையின் எழில்
தன்னை இரசித்திருந்தேன் -அதில்
கொண்டாடிக் கும்மாளம் போடும் அலையிடை
கூடிக் களித்திருந்தேன்
திண்டாடிக் காயம் எடுத்த மனதினில்
தென்பினை ஊட்டவென - நிற்கக்
கண்டோடி என்னில் கலந்தவளோ இது
காண்சுகம் அல்லவென்றாள்
சொண்டோடிச் செவ்வண்ண மானகிளி சொல்லும்
செல்ல மொழியுடையாள் - கடல்
நண்டோடி ஊரும் நடை பயில்வாள் இந்த
நானிலத்தில் எழிலாள்
தொண்டாகித் தூய மனமெடுத்தாள் எனைத்
தோழமை கொள்ள வைத்தே - ஒரு
செண்டாகிப் பூவாய் தினம் மலர்வாள் எனைச்
சித்தம் பிழற வைத்தாள்
காணும் மகிழ்வு கொண்டாள் - உயர்
வெண்முகிலும் கொண்ட வானநிலவென
வண்ணம் மறைந்து கொண்டாள்
திண்ணமிதே அந்த தென்றலென விழி
தன்னில் குளுமை கொண்டாள் - ஏதும்
பண்ணாமலே உயிர் வேதனை ஆக்கிப்பின்
பாதியென் றாகிவிட்டாள்
கண்களினைக் கயலென்று சொன்னார் அவை
காணுமோ என்றிகழ்ந்தேன் - இது
பெண்மயிலோ எனப் பேச்சுரைத்தார் இவள்
பேதமை யில் நகைத்தேன்
எண்ணமின்றி அயல் சென்றவனை அட
எப்படி மாற்றினளோ - இரு
கண்ணசைவில் என்னை கொள்ளையிடும் வகை
கண்டு திகைத்துநின்றேன்
பொன்னெனு மோரெழில் மாலை கண்டேன் சுடர்
போகமயங்கி நின்றேன் - பசுந்
தென்னோலையில் நடஞ்செய்யுந் தென்றல்தொட
தேகம்சிலிர்க்க நின்றேன்
என்னானதோ இவள் பார்வைபட இவை
அத்தனையும் மறந்தேன் - என்ன
சொன்னால் நடந்திடும் மாயமென அவள்
சுட்டும் வழிநடந்தேன்
தண்டாடும் பொய்கையின் தாமரையின் எழில்
தன்னை இரசித்திருந்தேன் -அதில்
கொண்டாடிக் கும்மாளம் போடும் அலையிடை
கூடிக் களித்திருந்தேன்
திண்டாடிக் காயம் எடுத்த மனதினில்
தென்பினை ஊட்டவென - நிற்கக்
கண்டோடி என்னில் கலந்தவளோ இது
காண்சுகம் அல்லவென்றாள்
சொண்டோடிச் செவ்வண்ண மானகிளி சொல்லும்
செல்ல மொழியுடையாள் - கடல்
நண்டோடி ஊரும் நடை பயில்வாள் இந்த
நானிலத்தில் எழிலாள்
தொண்டாகித் தூய மனமெடுத்தாள் எனைத்
தோழமை கொள்ள வைத்தே - ஒரு
செண்டாகிப் பூவாய் தினம் மலர்வாள் எனைச்
சித்தம் பிழற வைத்தாள்
0 comments:
Post a Comment