முன்நே ரிருவிழிகள் மொழிசொல் குறுநகையும்
தன்நேர் திருநடையும் தாளமிடும் கால்மணியும்
மின்னற் கொடிவிளையும் மோகனமும் முழுநிலவென்
பொன்வார் எழில்வதனப் பூங்கொடியாள் முன்னேஎன்
கண்ணிற் படவந்தாள்,கனிந்துமனத் தழல்சொரிய
வெண்ணை வழிதேக விளங்குமல ருறைவாசத்
தண்ணெழி லாள்தன்னைத் தாகமுற நான்நோக்க
எண்ணத் திருந்தஅவள் ஏக்கமது கண்டினித்தேன்
மண்ணிற் சிறுயிடையாள் மதுவழியு மிருஇதழைக்
கிண்ணத் திருவமுதம் தேவர்மறந் திருத்திவைத்த
வண்ண குவளையெனும் வாய்மலரின் தாகத்தை
உண்ணக் கருதிஅவ ளுள்ளதிசை மருகிநின்றேன்
செந்தாழம் பூந்தேகம் திரிந்துவ ளைந்தயிடைச்
சந்தும் சரிந்தெழுந்து சரசமிடும் பூம்பொதியும்
முந்தும் குணமும் முல்லையெனும் பல்லொளிரச்
சிந்தும் நகைமன்னர் திறைமணிக ளெனப்படர்ந்தே
இமைகள் துடித்திளமை இறுகமூச்செழ முடியா
தமைவன் தருதென்னத் திளங்கனியென் னிருசார்கொள்
குமைந்த வளைந்திழைந்து கொண்டுபரந் தினவெடுத்தே
சமைந்தழல் வெஞ்சரமெடுத் தழைந்திடவென் மனமிழையத்
தண்ணொளி யேதேனே தருமமென ஏதுமிலாக்
கிண்ணமெடுத் திரந்திருக்கும் கீழ்மகனைப் போலிரந்து
வண்ணக் குறுங்கனவே வாழ்வில்லை நீயென்னிற்
திண்மை குலைத்தசிறு தேரேநீ சேரென்னை
என்னத் திருமகளாள் இனிதுஉணர்ந் தனதிருகால்
பின்னப் பிழன்றுகுறை பிறைநிலவென் னுதல்பிறந்த
சின்னத் துளிவியர்வை சிந்துமள வச்சமெடுத்
தன்னநடை பயின்றணுகி அலைகுழலாள் எனதுவல
கன்னத் தொருகடிதினையே கனியவொரு மின்னலென
சொன்ன தொருஒளியும் கொள்ளத்தெம துதிரம்
தின்னவருங் கொசுவினறம் கொள்ளா வாழ்வணைத்த
தன்னவொரு விதமெடுத்தே தளிரென்மலர்க் கரமீந்தாள்
தன்நேர் திருநடையும் தாளமிடும் கால்மணியும்
மின்னற் கொடிவிளையும் மோகனமும் முழுநிலவென்
பொன்வார் எழில்வதனப் பூங்கொடியாள் முன்னேஎன்
கண்ணிற் படவந்தாள்,கனிந்துமனத் தழல்சொரிய
வெண்ணை வழிதேக விளங்குமல ருறைவாசத்
தண்ணெழி லாள்தன்னைத் தாகமுற நான்நோக்க
எண்ணத் திருந்தஅவள் ஏக்கமது கண்டினித்தேன்
மண்ணிற் சிறுயிடையாள் மதுவழியு மிருஇதழைக்
கிண்ணத் திருவமுதம் தேவர்மறந் திருத்திவைத்த
வண்ண குவளையெனும் வாய்மலரின் தாகத்தை
உண்ணக் கருதிஅவ ளுள்ளதிசை மருகிநின்றேன்
செந்தாழம் பூந்தேகம் திரிந்துவ ளைந்தயிடைச்
சந்தும் சரிந்தெழுந்து சரசமிடும் பூம்பொதியும்
முந்தும் குணமும் முல்லையெனும் பல்லொளிரச்
சிந்தும் நகைமன்னர் திறைமணிக ளெனப்படர்ந்தே
இமைகள் துடித்திளமை இறுகமூச்செழ முடியா
தமைவன் தருதென்னத் திளங்கனியென் னிருசார்கொள்
குமைந்த வளைந்திழைந்து கொண்டுபரந் தினவெடுத்தே
சமைந்தழல் வெஞ்சரமெடுத் தழைந்திடவென் மனமிழையத்
தண்ணொளி யேதேனே தருமமென ஏதுமிலாக்
கிண்ணமெடுத் திரந்திருக்கும் கீழ்மகனைப் போலிரந்து
வண்ணக் குறுங்கனவே வாழ்வில்லை நீயென்னிற்
திண்மை குலைத்தசிறு தேரேநீ சேரென்னை
என்னத் திருமகளாள் இனிதுஉணர்ந் தனதிருகால்
பின்னப் பிழன்றுகுறை பிறைநிலவென் னுதல்பிறந்த
சின்னத் துளிவியர்வை சிந்துமள வச்சமெடுத்
தன்னநடை பயின்றணுகி அலைகுழலாள் எனதுவல
கன்னத் தொருகடிதினையே கனியவொரு மின்னலென
சொன்ன தொருஒளியும் கொள்ளத்தெம துதிரம்
தின்னவருங் கொசுவினறம் கொள்ளா வாழ்வணைத்த
தன்னவொரு விதமெடுத்தே தளிரென்மலர்க் கரமீந்தாள்
0 comments:
Post a Comment