(அவன் ஆற்றாமை)
ஒயிலன்ன நடை கடலின் அலைபுரைய நெளிகுழலும்
கையிலென்ன மலர் காந்தாள் காணுமெழில் மதியுறல
வெயிலென்ன விழிகூர்மை தருமான தகிப்பெழவும்,
துயிலென்ன விடுஎன்று துயர் செய்வள் நிகர்வாளின்
கொடும்வீச்சின் செயலொப்ப குளிர்காற்றின் கூர்மையது
விடும்வேலின் தகையன்ன விடலைஉடல் புயல்கடுப்ப
தொடுமலரின் கணைவீச்சில் துயரேய்ப்ப தருமிவளை
படும் கதிரின் ஒளிபுல்லின் பனியியைய உருகினவன்
(மலரின் ஆற்றாமை:)
வளையலொலி பெருகமலர் வடிவிற் றனை வென்றவளும்
அளைமேகக் கூந்தல் தனையடைய அதன்நறுமணமும்
விளையின்பம் தருநாற்றம் வியந்து மனம்சிறுமை கொள
களைபோமென் றெண்ணியுடன் கருகுவது போற்குவியும்
துளை மூங்கில் ஊதுமது தேடும்கரு வண்டிதழின்
மழைஈரம் மெழுகுஎழில் மலரிதழில் இல்லையென
இழையொத்த இடைகொடியின் இசைநளினஎழில் போதை
விளை வகையும் கண்டு தனை விடுமென்று மீளலரும்
(அவளோ)
வளைகொடியின் மலரும் கணம் மலருவதும் ஒடிவதுவும்
முளைபயிரின் பசும்தனை முகமதிடை புனையிவளும்
சுளை தேனில் ஊறும்இனி சொல்மீட்டும் கருவிமலர்
களைகொண்டு விரியும்கணம் கருவண்டில் அஞ்சிவிடும்
0 comments:
Post a Comment