Pages

Monday 27 February 2012

மலரோ? மகளோ?



இதழ்பூத்து மதுஊற்றி வழிகின்றது- அது
எதையூற்றி இதயத்தைப் பிழிகின்றது
மகிழ்வேற்றி மனதோடு இழைகின்றது - அது
மலர்வாகி இசைராகம் பொழிகின்றது
அகிலேற்றிக் கரம்தீப ஒளிகூட்டுது - அந்த
அனலேற்று மொளிபொன்னில் எழில்காட்டுது
நுதலோடு விரிவானக் குழலென்பது - அதில்
நிதம் மாறும் நிலவொன்று ஒளிர்கின்றது

அலைகண்டு நடைதந்து வளமாக்குது - அதில்
அலைகின்ற நினைவெங்கோ தொலைகின்றது
மலையோடு மழைகூடி நதியாகுது - அது
மடிகொண்ட பிரவாகம் மனங் காணுது
தலைமேவி நீரோடில் பெருவெள்ளமே - இத்
தவிப்போடு நிதம்காணும்  இளநெஞ்சமே
கலையின்ப இசையார்க்கும் எழில்வீணையோ - அதை
காணதவிழி கூறும் அதுதான் இதோ!

கனிதூங்கு மதைக் காத்துக் கிளிஏங்குமோ - அது
கதைபேசும் வகைபோலும் குரல்நாதமோ
பனிதூங்கும் புல்போர்த்த பசும் மேடையோ - அதில்
பகல் காணும் ஒளிக்கீற்றின் பிரகாசமோ
தனியாக எவர்கொண்டு உருவாக்கினார் அதைத்
தரநூறு வகை வண்ண மெருகேற்றினார்
இனிதேவர் உலகத்தில் இடம்மிஞ்சுமாம் - ஏன்
இவள்வீட்டின் முன்னாலிந் திரலோகமாம்

0 comments:

Post a Comment