Pages

Tuesday 24 January 2012

இன்று மிஞ்சினள்! நாளை கெஞ்சுவள்!

மானென் றிடவேழம் மதமெடு
பூவும்பொலி தேனென் றழகொடு
நானும் உயிர்தானும் துடிபட
காணும் அவைதேரென் றுலவிட
வானும் மழைகாணும் சிறுமயில்
ஆடும் எனப்பூவை நடைகொள
ஏனோ கனவாகும் நினைவினைக்
காணும் மனமேகு மதனிடை

பாலும் பழநீரும் கலந்திடப்
பாயும் மதிதாரு மொளிகொள
நூலும் எனக் காணு மிடைகொள
நூறும் எனயாரும் அளவிட
மேலும் பலமின்னும் நினைவெழ
மேனிமழை கொண்டோர் நிலமென
ஆலும் அதுதாரும் நிழலென
ஆசைமொழி கூறிக் குளிர்தர

சேனைபடைகொண்டோ அரசெனச்
சீறும் பெருவேங்கை திமிரென
தான்ஐம் பொறியாவும் ஒருங்கிடத்
தாரும் பெரிதாகும் சுவையென
பூநெய்தனை உண்ணும் உயிரெனப்
போதில் இரவில்லை வருமொரு
ஏனைஎழில் கொள்ளும் பகல்கெட
இரண்டு முறவாடும் கருகலில்

தானும் எமனாகி உயிர்கொளத்
தாவும் எருதேறும் செயலென
ஊனும் உருயாவும் உருகிட
உள்ளம் மெழுகாகி இளகிட
கோனும் அவன் கொடிதோர் வாளினைக்
கொண்டே இருகண்கள் வீச்சிட
நானும் அழிவேனோ என்னுடன்
நாளும் உயிர் கொல்வாள் போரிட !

நாளும் வரும் என்னைத் துணையென
நாணம் உற நல்லோர் பொழுதினில்
தோளும் வலி கொள்வோ னிவனிடம்
தோற்றே னெனத் துறவிப் தனமொடு
நாலும் அதில் நாணம் மிவைகளை
நூலும் மலர்மூடும் பனியிடை
கோலம் நிலவென்றே நிகரிட
கொடுமை தனை விளையென் றுழறுவள் !!

0 comments:

Post a Comment