Pages

Monday 12 September 2011

நீரள்ள வந்ததோ தாமரை !

செந்தூர மென்வண்ண செங்கனி முகங்கண்டு
      சேர்முகிலில்மூடும்கதிரும்
மன்னன் ரதிமலரில் தன்வேல் மறைத்தெறிமா
     மலைமனமும் கவிழும்விழியாள்
சின்னோர்வளை புருவஞ் சேர்மதியம் நீராடச்
      சிதையு நீரோடி மின்னும்
மென்னீர்மின் பவள மிளிர்சங்கை நேர்கண்டம்
      மேன்மைசொல நாளேகுமே

தந்தஇடை கொள்குடமோ தளிர்மேனி கொஞ்சத்
      தாங்காது கொல்கொல் என்று
சந்தன மென்பாதச் சதங்கைகாள் வெகுண்டுகல
     சத்தமிடுஞ் சேதி சொல்லும்
முந்தோடிச் செல்காற்றும் மோந்துநீர் கொள்வோள்
     முன்கால் நீருள்புதை யயலில்
செந்தாமரைக் கீழ் சிறுஇலையின் மறைகயலின்
     செவிகூற விழியும் கண்டே

அந்தோசொல் கேளீரவ ரெங்கள்குலத் திருவரென
    ஆ வென் றலறியோடி
செந்தாமரை யெம்மைச் சிறையெடுப்ப தென்னவோ
    சேரீர் என்றூர் சலசலக்க
வந்ததோர் சொல்கேள் வளைஅலைநீ ருறங்குகுலம்
    வாழ்வெண்ணித் துடிதுடித்து
எந்தோ பங்கயமென் றெழுந்துபடை கயல்திரளும்
   இனிதாமெம் ஈழநாடே!

0 comments:

Post a Comment