Pages

Monday 12 September 2011

செல்லம்மா நீ சொல்லம்மா


தென்னைமரச் சோலையிலே தேன்நிலவுகாய்கையிலே
என்னுடனே நீயிருந்தாய் செல்லம்மா - நீ
சொன்னகதை எத்தனைதான் செல்லமா

வானோடும் நிலவுகண்டு வண்ணமுகம் சிவந்திடவே
தானோடி முகில் மறைய செல்லம்மா - நீ
தந்தசுகம் அத்தனையும் சொல்லவா?

செந்தாழம்காலெடுத்து சிரித்துநீயும் நடக்கையிலே
உன்னாடும் இடை நடனம் செல்லம்மா - அந்த
ஊர்வசியும் ரம்பை கெட்டாள் கொள்ளம்மா

பூக்கூடை நீயிருக்க பூஎடுத்து மாலைகட்ட
ஆத்தாடிஎன்று நீயும் செல்லமா -மனம்
அதிசயித்து எனை அணைத்தாய் மெல்லமா

பூவோட இதழெடுத்து புன்னகைக்கும் உதடுசெய்து
தேனோட ஊறவைத்தான் செல்லம்மா - அது
தித்திக்குமா நான்கடித்தால் வெல்லமா

பாத்தாலே கிறங்கவக்கும் பனிமலராய் உனைப்படைத்தான்
காத்தோட கைபடாமல் செல்லம்மா - நீ
கச்சிதமா மறைத்து வைத்தல் ஏதம்மா?

நேற்றோடு முடிந்ததடி நீ எடுக்கும் நாணமெல்லாம்
காற்றோடு பறக்கவிடு கழுத்திலே - நானும்
கட்டிவிட்டேன் தாலி தனை செல்லம்மா

பாக்கவேணும் இன்னுமென்ன பாவையடிகள்ளி நீயும்
போட்ட சேலைஅழகுதானே செல்லம்மா - அதை
பூமிக்கு நீகட்டிவிட்டு நில்லம்மா.

0 comments:

Post a Comment