நீல விழிகொண்டு கண்டாள் - என்
நெஞ்சில் நெருப்பினைத் தந்தாள்
பாலமு தாய்இதழ் கொண்டாள் - ஒரு
பார்வை யிலே எனை வென்றாள்
நெஞ்சில் நெருப்பினைத் தந்தாள்
பாலமு தாய்இதழ் கொண்டாள் - ஒரு
பார்வை யிலே எனை வென்றாள்
ஏனிவள் பூமியில் வந்தாள் - என்
ஏழைமனம் கொய்து கொண்டாள்
தானினிப் பாளெந்தன் உள்ளம் - தனை
தத்தளிக்க மெல்லக் கொன்றாள்
தேனிவள் என்றிடில் வண்டால்- ஒரு
துன்பம் இழைந்திடு மன்றோ
மீனிவள் கண்களோ என்றால் - அது
மண்ணில் துடிப்பது நன்றோ
மானிவள் துள்ளலே என்றால்- அந்த
மாஅரி பாய்ந்திடு மன்றோ
வானில்நி லவுபோல் என்றால்- அவள்
வாழ்வுதொ லைவாகு மன்றோ
பூவெழில் கொண்டவள் என்றால் - பூ
மாலையில் வாடிடு மன்றோ
மாவின்சு வைகனி என்றால் - கிளி
மங்கையைத் தீண்டிடு மன்றோ
பஞ்சுடல் மென்னிளம் மேனி - எனில்
பஞ்சுப றந்திடு மன்றோ
நெஞ்சு தவிப்பதைக் கண்டால் - என்
நிம்மதி போயிடு மன்றோ
தெங்கென ஓடிவ ளர்ந்தாள் - பல
தீஞ்சுவை இன்பம் பகிர்வாள்
எங்கிருந்தோ இவள் வந்தாள் - எனை
எத்துணை பித்தனாய் செய்தாள்
மங்கி மறையும் பகலாய் - என்
மாபெரும் வன்மை கரைத்தாள்
செங்கனி தேடிடும் வண்டாய் - தனைச்
சுற்றிடச் செய்தாள் தகுமோ?
0 comments:
Post a Comment